×

6 மாதம் முதல் 5 வயது வரையில் குழந்தைகளுக்கு ‘வைட்டமின்-ஏ’ திரவம் வழங்கும் முகாம் 25ம் தேதி வரை நடக்கிறது

திருப்பூர், செப்.21: திருப்பூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக, குழந்தைகளுக்கு தேசிய வைட்டமின்-ஏ சத்து குறைபாடு நோய்களை தடுக்கும் திட்டத்தின் கீழ், வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் திருப்பூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த முகாம் வரும் 25ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள சுமார் 1.5 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்பட உள்ளது. வைட்டமின் ஏ சத்து 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் உடல், மன வளர்ச்சி மற்றும் புத்தி கூர்மைக்கு மிகவும் இன்றிமையாது நுண்சத்து ஆகும். மேலும், வைட்டமின் ஏ சத்து கண்குருடு ஏற்படாமல் தடுக்க மிகவும் அவசியமான ஒன்றாகும். வைட்டமின் ஏ திரவம் வழங்குவதனால் எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படாது.

இந்த திரவம் அனைத்து துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் 6 மாதம் முதல் 11 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு 1 மில்லி அளவும், 12 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 2 மில்லி அளவும் வழங்கப்பட உள்ளது. இதற்காக 9622 (100 மில்லி) குப்பிகள் பெறப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் கொடுத்து பயன் பெறலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post 6 மாதம் முதல் 5 வயது வரையில் குழந்தைகளுக்கு ‘வைட்டமின்-ஏ’ திரவம் வழங்கும் முகாம் 25ம் தேதி வரை நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Jagadish Kumar ,Tirupur District Health Services ,Tamil Nadu government ,
× RELATED போலி ஆதார்: திருப்பூரில் 3 வங்கதேச இளைஞர்கள் கைது